Tuesday, December 23, 2008

போர் முகம்


"இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரிசைப்படுத்தினான்.

"நேரம் 5.10 மணிதான் இருக்கும். ஆமிக்காறங்களிட்ட விழுந்த எங்களின்ர பொசிசனுகளைப் பிடிக்கிறதுக்கு எங்களின்ர அணி போய்க்கொண்டிருந்தது. மூவிங் ரேஞ்சுக்குள்ளால் நாங்கள் நகர்ந்து ஆமிக்காறங்கள் நிக்கிற பொசிசனுக்குப் பக்கத்தில் போட்டம். போய் நிலமையளை வடிவாய் அவதானிச்சம். நாங்கள் நிக்கிற இடத்தில இருந்து இடது பக்கத்தில இருக்கிற ஆறு பொசிசனில ஆமிக்காறங்கள் ஏறீட்டாங்கள். இப்ப நாங்கள் அந்த ஆறு பொசிசனையும் ஆமிக்காறங்களிட்ட இருந்து அடிச்சுப் பிடிக்கவேணும். எல்லா றெடி. நாங்கள் தொடங்கிறதுதான் வேலை. ஆமிக்காறங்கள் நிக்கிற இடத்துக்குக் கிட்ட நெருங்கீட்டம் ஆர்.பீ.ஜி அடியோட சண்டையைத் தொடங்கிறதுதான் எங்களின்ர அணியின்ர திட்டம்" என்று கீரன் சொல்ல முறியடிப்பு அணிப் போராளிகள் எங்களைச் சூழ்ந்து விட்டார்கள். நாங்கள் அமைதியாக, அனைவரும் சிரிப்பும், கூத்துமாய் அன்றைய சண்டையின் வெற்றியை வெளிப்படுத்தினார்கள்.

போராளிகளின் கும்மாளங்களிற்குத் தாளம் போடுவதைப்போல தலையை அசைத்தபடியே முறியடிப்பு அணிப் போராளி கீரன் சிங்களப் படைகளைச் சுறுட்டிக்கட்டிய அந்தச் சமர்க்களத்தின் பதிவுகளை புரட்டிப்போட்டன். "எங்களின்ர அணியில ஆர்.பி.ஜி போய வந்த அறிவு எங்களின்ர முறியடிப்பு அணியளின்ர சார்பில் முதலாவதாய் மங்களத்தைத் தொடங்கினான். எங்களின்ர எதிர்ப்பை விடவும் ஆமிக்காறங்களுக்கும் எங்களுக்கும் இடையில பயங்கர சண்டை ஒண்டுமே தெரியல அந்தளவுக்கு புகையும் மருந்து மணமும்தான் இருந்தது. "என்றவன் அங்குமிங்கும் மூக்கை அசைத்தான் "நாங்கள் ஒருக்கால் ஆர்.பி.ஜி அடிக்க ஆமிக்காறங்கள் ஏழு எட்டுத் தரத்திற்குமேல ஆர்.பி.ஜியால போட்டு பொழிஞ்சுகொண்டிருந்தான்" என்று கீரன் சொல்ல ‘அப்ப அவன் அடிச்ச மற்றதுகளெல்லாம் என்ன மச்சான்" என்றான் ஆற்றலன். "டொங்கானுகள் பிகேயள் ஏகே எல்.எம்.ஜியள்" என்றவன் "இதுகளோட லோவுகளாலையும் குண்டுகளாலையும் போட்டு அந்தஇடத்தையே... பிறகென்ன எரிமலைதான்" என்றான் கீரன்.

முறியடிப்பு போராளிகளின் சண்டை அனுபவம் மிகவும் கடுமையானதாய் இருந்தது. இந்தளவுக்குள்ளையும் எப்படி தப்பிநின்றாங்களோ தெரியல்ல என்று மனசுக்குள் நினைத்து சற்று பயந்துகொண்டோம். எங்களது சிந்தனை தேவையற்றதுபோல "அண்ண ஆமிக்காறங்கள் எவ்வளவுதான் அடிச்சாலும் நாங்களும் விடேல்ல எங்களின்ர பொடியளும் எல்லாத்தையும் போட்டு முழுமையான எதிர்பையும் கொடுத்தம் ஆமிக்காறங்கள் அடிச்ச குண்டு ஒன்று எங்களுக்கு கிட்ட விழுந்திற்றுது.

அதில எங்களின்ர ஆர்.பி.ஜி அறிவு காயப்பட்டான். காயம் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. தசை பிஞ்சு தொங்கிக்கொண்டிருக்க, இரத்தம் பாயிறமாதிரி ஓடிச்சுது ஆனாலும் அறிவு ஓயமாட்டன் என்றிட்டான். ஆர்.பி.ஜி போட்ட செல்லை அடிச்சுப்போட்டு வாறன் என்ற நிற்கிறான். எங்களின்ர மெடிசின் காறன் விடேல்ல அறிவைப்பிடித்து மருந்தைக் கட்டிப்போட்டு பக்கத்தில இருந்த எங்களின்ர பொசிசனுக்குள்ள விட்டிட்டான்" என்ற கீரன் அருகிலிருந்து ஆற்றலனைப் பார்த்தான்.

அவ்வளவுதான் தனது பேச்சை நிறுத்திவிட்டான். "இப்பநிலமை மோசமாகிவிட்டது. ஆமிக்காறங்களின்ர கையோங்கிவிட்டது. ஆமிக்காறங்கள் நிக்கிற எங்களின்ர பொசிசனை அடிச்சுப்பிடிக்கிற திட்டத்தோட போனனாங்கள். கொஞ்சம் நெருக்கடியைச் சந்தித்தம். ஆமிக்காறங்களின்ர எதிர்ப்பும் கடுமையாய் இருந்தது. இந்த நிலைமையில் நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம்" என்றவனின் சிரித்த முகம் சடுதியாகவே இருண்டது. இப்ப எங்களின்ர அணியிலிருந்த வெண்மதியும் காயப்பட்டிற்றான்' என்ற கீரன் "அண்ண என்னதான் நடந்தாலும் எங்களின்ர நடவடிக்கையிலை கொஞ்சம்கூட தளம்ப மாட்டம். முடிஞ்சவரைக்கும் பாதுகாத்து குறிக்கப்பட்ட இலக்கை அழிப்பம். இல்லையென்றால் உயிரைக்கொடுத்து அந்தவெற்றியைச் சாதிப்பம்." என்றதுதான் எங்களின்ர அடிப்படையாய் இருந்தது.

"நாங்கள் கொஞ்சம் பின்னுக்கு வந்திட்டம். அடுத்த நிமிடம் எல்லாத்தையும் ஓழுங்குபடுத்திக்கொண்டு வெளிக்கிட்டிட்டம். இந்த ஒழுங்குபடுத்தலின்படி நான் ஆமிக்காறங்களின்ர பக்கத்தில் நல்லாய் நெருங்கிப்போய் குண்டை அடிக்க, ஆற்றலன் தன்ர பீ.கேயால ஆமிக்காறங்களிற்கு அடிக்க காவலன் தமிழ்க்குமரன், செந்திரையன், இசைமாறன், கார்நெஞ்சன் ஆக்கள் இவ்வளவுபேரும் தங்களின்ர எதிர்ப்புகளை சமநேரத்திலே கொடுக்கவேண்டும். இதுதான் திட்டம்" என்ற கீரன் பலமான சண்டைக் கட்டத்திற்குள் சென்றான்.

"நான் நிறையக்குண்டுகளோட மூவிரேஞ்சுக்குளால போய்க்கொண்டிருந்தன். இப்ப ஆமிக்காறங்களிட்ட இருந்து நாங்கள் அடிச்சுப்பிடிக்கவேண்டிய முதலாவது பொசிசனுக்கு கிட்டப்போட்டன் அந்த பொசிசனைச்சுற்றி எல்லாப் பக்கத்திலையும் ஆமிக்காறங்கள் நிக்கிறாங்கள். பண்டுக்குமேல எல்லாம் ஆமிக்காறங்கள் நிறையப்பேர் நிக்கிறாங்கள். ஆனால் குண்டுகளோட போய்க்கொண்டிருந்த என்னை ஆமிக்காறங்கள் காணவில்லை. இப்ப 15 மீற்றர் தூரத்தில ஆமிக்காறங்கள் இந்த முறை எப்படியென்றாலும் பொசிசனைப் பிடிச்சிடவேணும். இதைத்தான் என்ர மனசில இருக்கிற ஒரேயோரு நோக்கம். மூவிங்ரேஞ்சுக்குள்ள ஒரு இடத்தில நல்ல மறைப்பு. அதில குண்டுகளோட அப்படியே கவர் எடுத்திட்டன் அதில இருந்துகொண்டு நிலமையை அவதானித்தன். எல்லா இடங்களிலையும் ஆமிக்காறங்கள் மொச்சுப்போய் இருக்கிறாங்கள். இப்ப எந்தப் பக்கம் ஆருக்கு குண்டு அடிக்கிறது.? இதற்கான விடையைத் தேடிக்கொண்டிருந்தார்.

"கையில குண்டு கழற்றியபடியே இருந்தது என்ர கண்ணுக்கு ஆமிக்காறங்கள் எல்லாரும் தெரிந்தாங்கள் இப்ப குண்டு அடிக்கிறதுதான் என்ரநோக்கம் அடிக்கப்போகிற குண்டுக்குக் கிடைக்கிற பெறுமானம் பெரிதாய் இருக்கவேணும். அதுக்கான இரையைத் தேடிக்கொண்டிருந்தன் பொசிசனுக்குப் பக்கத்தில பண்டுக்குமேல ஆமிக்காறங்களின்ர பீ.கே.யும் ஆர்.பி.ஜியும் இருந்தது. இது என்ர கண்ணுக்கு பட்டதுதான் பிறகென்ன?" என்ற கீரன் சீரியசாய் கதைத்துக்கொண்டிருந்தான்.

"ஆர்.பி.ஜி காரனும் பிகே காரனும் ஒரே அடியாய் நிக்கிறாங்கள். அதுமட்டுமல்ல இன்னும் நாலைந்து ஆமிக்காறர்களும் ஒன்றாய் நிண்டாங்கள். அவங்கள் எங்களுக்கு அடிக்கிறதிற்கு தயாராய் நிக்கிறாங்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினால், நாங்கள் எங்களின்ர நோக்கத்தை வேகமாய் அடைந்திடலாம். ஓரே அடியாய் இரண்டு குண்டுகளை எடுத்து சடசடவென அடிச்சன். அந்தளவுந்தான் இரண்டு குண்டும் பெரிய சத்தத்தோட வெடிச்சுது.

"அந்தக்குண்டுகள் வெடிச்சதோட மகே அம்மே எண்டு ஆமிக்காறங்கள் கத்தினாங்கள். அடுத்தது என்ன.? என்றது ஒன்றுமே தெரியேல்ல. எங்களின்ர ஆற்றலன் பீகேயால போட்டு பொளிஞ்சான். அதோட எங்களின்ர மற்றப்பொடியளும் கொடுத்தாங்கள். ஆமிக்காறங்களின்ர பீகே வரவே இல்லை, டொங்கான் மற்றது குண்டுகள் எல்லாத்தாலையும் போட்டுப் பொழிஞ்சுகொண்டிருந்தாங்கள். நாங்களும் விடேல்ல, வாழ்வா சாவ என்கிற கட்டத்தில நாங்கள் அடிபட்டம். கொஞ்சநேரம் அந்த இடம் குலுங்கிக்கொண்டிருந்தது" என்ற கீரன் வெற்றியின் வாசலில் நிற்கிறோம் என்பதாய் முகபாவனையைக் காட்டினான்.

"ஒரு பத்துநிமிடம் இந்தச்சண்டை நடந்திருக்கும். எங்களின்ர பொடியங்களின்ர அடியால ஆமிக்காறங்களிட்ட பொசிசன்களில ஒண்டு எங்களிட்ட விழுந்திட்டுது. எங்களிட்ட விழுந்த பொசிசனில லீடர் வெண்ணிலவண்ண நிண்டுகொண்டு எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினார். இப்ப நாங்கள் அடுத்த பொசிசனைப் பிடிப்பதற்கு போய்க்கொண்டிருந்தோம். ஆர்.பீ.ஜி அறிவு காயத்தோடையும் எங்களோட வந்துகொண்டிருந்தான். முதல் மாதிரியே நான் குண்டு அடிக்க அதற்குப் பின்னுக்கு எல்லா வெப்பனுகளும் நகர்ந்துகொண்டிருந்தது. அடுத்த பொசிசனையும் அடிச்சுப்பிடிச்சிட்டம். இதில எங்களுக்கு பெரிசாய் எதிர்ப்புக்கிடைக்கவில்லை.

இப்ப இதில இருந்து அடுத்த பொசிசனைப்பிடிக்க வேண்டும். நகர்ந்தம் முதல் எங்கையும் இல்லாதமாதிரி பயங்கர எதிர்புகளைச் சந்திக்கவேண்டியதாய் இருந்தது. என்ன எல்லாத்தையும் போட்டு அடிக்கமுடியுமே அத்தனையும் போட்டு எங்களிற்கு அடிக்கத்தொடங்கீற்றாங்கள் நாங்களும் விடாமல் சண்டைபிடிச்சம் இருந்தும் நிலமை எங்களுக்கு சாதகமாய் வரேல்ல" என்ற கீரன் பேச்சில் தளர்வு "ரவுண்ஸ் மாதிரி ஆர்.பிஜீசெல்லுகளை ஆமிக்காறங்கள் அடிச்சாங்கள் எப்படியும் இந்தப் பொசிசனைப் பிடிக்கிற என்கின்ற வேகத்தில நாங்கள் மூன்றுதரம் ரை பண்ணிப்பார்த்தம் எதுவும் சரிவரேல்ல. ஆனாலும் அந்தப் பொசிசனைப் பிடிப்பதற்காக சாதகமான நிலைமைகளைப் பிடிச்சிட்டம். இப்ப எங்களிட்ட இருந்த ரவுண்சுகளெல்லாம் முடிஞ்சுது அதுகள் நிரப்புவதற்காக வெண்ணிலவன் அண்ணேன்ர இடத்திற்கு வந்திட்டம், என்ற கீரனின் அடுத்தகட்ட சண்டையை மனதுக்குள் தாங்கி அவனது முகத்தையே பார்த்தபடி இருந்தோம்.

0 comments:

Blog Archive