Tuesday, September 9, 2008

இரகசியத்தின் பெறுமதி

போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர்.

ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே சென்றபோது எதிர்பாராத முகமாக தன் மகனைக் காண்கின்றாள். மகனோ ஒரு இரகசியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்தை நன்கு அறிந்த தாய் அனுடன் கதைப்பதால் தனது மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி மகனைப் பார்த்தும் கதைக்கவில்லை.

அவனும் தாயைக் கண்டுவிட்டான். ஆனால் அவன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான். ஒரு பார்வையுடன் இருவரும் பிரிந்து விட்டார்கள். தாயோ தமிழீழத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதற்குப் பிறகு தான் பெற்ற பிள்ளையைக் பார்க்கவில்லை. அன்று ஒருநாள் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

நம்பித்தான் ஆகவேண்டும் வெடிகுண்டு வெடித்து சிதைந்துவிட்ட நிலையில் தனது மகனின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டாள்.

மகன் தனது தேசத்திற்காகவும் தனது மக்களுக்காகவும் தன்னை இரகசியாக அர்பணித்தை உணர்ந்துகொண்டாள். ஆனாலும் தனது கணவருக்கு கூட கூறவில்லை. தனக்குள்ளேயே இரகசியத்தைப் பூட்டி வைத்தாள். அந்த இரகசியப் பணியின் பெறுமதி அந்த தாயுக்கு நன்கு தெரியும். அந்த தாயையும் மகனையும் சாதாரண மனிதப் பிறவிகளாக கணிப்பிட்டுவிடலாமா?

0 comments:

Blog Archive